ADDED : பிப் 17, 2024 11:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி, திருத்தணி ஒன்றியம், சிறுகுமி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள், 26. இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். 11ம் தேதி பெருமாள் தன் இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு செல்லும் போது, கே.ஜி.கண்டிகை அருகே எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த பெருமாள் சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். நேற்று அதிகாலை பெருமாள் இறந்தார். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.