/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாணவியிடம் அத்துமீறிய வாலிபருக்கு வலை
/
மாணவியிடம் அத்துமீறிய வாலிபருக்கு வலை
ADDED : நவ 28, 2025 03:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி: திருத்தணி பகுதியில் அரசு உதவிபெறும் உயர்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் நேற்று காலை பள்ளிக்கு நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபர், திடீரென, மாணவியை மறித்து அத்துமீறியதால், மாணவி கூச்சல் போடவே, அங்கிருந்த பொது மக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் வரவே, வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடினார்.
சம்பவம் குறித்து திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

