ADDED : ஜூலை 08, 2025 04:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம், அமரபாகம் கிராமத்தில், பாட்டி மற்றும் தாயுடன், 12 வயது சிறுமி வசித்து வருகிறார். இவரது உறவினர், தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக், 30. இவர், 2024 டிச., 24ல் சிறுமி வீட்டிற்கு வந்து உள்ளார்.
அன்று, சிறுமியிடம் தவறாக நடந்துள்ளார். இதேபோல் பலமுறை நடந்துள்ளார். சிறுமி கர்ப்பமடைந்தார். சிறுமியின் தாய், திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிறுமியை சிகிச்சைக்காக சேர்த்தார்.
பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி ஆறு மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறினர். சிறுமி புகாரில், மன்னார்குடி மகளிர் போலீசார் நேற்று முன்தினம், கார்த்திக் மீது போக்சோ வழக்கு பதிந்துள்ளனர்.