sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவாரூர்

/

தங்கை கணவரை கொன்றவர் கைது

/

தங்கை கணவரை கொன்றவர் கைது

தங்கை கணவரை கொன்றவர் கைது

தங்கை கணவரை கொன்றவர் கைது


ADDED : பிப் 09, 2025 11:40 PM

Google News

ADDED : பிப் 09, 2025 11:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாரூர்; தங்கை கணவர் தலையில் கல்லை போட்டு கொன்ற நபர் கைது செய்யப்பட்டார்.

திருவாரூர் மாவட்டம், மாயனுாரைச் சேர்ந்தவர் சோமசுந்தரம், 33; கூலி தொழிலாளி. இவருக்கும், அதே ஊரை சேர்ந்த முருகேசன் மகள் சுபலட்சுமி, 25, என்பவருக்கும் இரு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் எட்டு மாதங்களுக்கு முன் பிரிந்தனர். இது தொடர்பாக, இரு குடும்பங்களுக்கும் முன்விரோதம் உள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, வடபாதிமங்கலம் கடைத்தெருவில், சுபலட்சுமி சகோதரர் சிவநேசன், 28, அவரது நண்பர்கள் மூவர் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக சோமசுந்தரம் சென்றார். சிவநேசன் அவரிடம் விவாகரத்து தொடர்பாக பேச்சு கொடுத்தார். அப்போது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

சிவநேசன் தன் நண்பர்களுடன் சேர்ந்து, சோமசுந்தரத்தை தாக்கி, அவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்தார். வடபாதிமங்கலம் போலீசார், சிவநேசனை கைது செய்து மற்றவர்களை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us