sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவாரூர்

/

தம்பியை கொன்ற அண்ணன் கைது

/

தம்பியை கொன்ற அண்ணன் கைது

தம்பியை கொன்ற அண்ணன் கைது

தம்பியை கொன்ற அண்ணன் கைது


ADDED : ஜன 13, 2025 01:03 AM

Google News

ADDED : ஜன 13, 2025 01:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாரூர்: திருவாரூர் அருகே தியானபுரத்தைச் சேர்ந்த ஜெயபால் மனைவி ரஷியா, 55. தம்பதிக்கு மூன்று மகன்கள். ஜெயபால் இறந்துவிட்டார். மூத்த மகன் ஜெயராஜ், 27. திருமணமாகி, 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இவர்களது வீட்டின் பக்கத்தில், தாய் ரஷியாவும், மூன்றாவது மகன் ஜெயராமன், 23, என்பவரும் வசித்தனர். அண்ணன், தம்பி இருவரும் வெல்டராக பணிபுரிந்தனர்.

நேற்று முன்தினம் இரவு, ஜெயராஜுக்கும், அவரது மனைவிக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது. அப்போது, அண்ணிக்கு ஆதரவாக ஜெயராமன் பேசினார்.

பின், ஜெயராமன் துாங்க சென்றார். ஆத்திரம் தீராத ஜெயராஜ், நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, தாய் வீட்டிற்கு சென்று, ஜெயராமனை அரிவாளால் வெட்டினார். படுகாயமடைந்த ஜெயராமன், அதே இடத்தில் இறந்தார்.

திருவாரூர் தாலுகா போலீசார், ஜெயராஜ் மீது வழக்கு பதிந்து, அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us