நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மன்னார்குடி: மன்னார்குடி அருகே டூவீலரில் சென்ற வாலிபர் மீது வேன்
மோதியதில் இறந்தார்.
மன்னார்குடி அருகிலுள்ள ஏத்தக்குடி கொத்தமங்கலம்
வீரையன் மகன் சங்கர் (27). நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில்
மன்னார்குடியில் இருந்து தனது ஊரை நோக்கி திருவாரூர் ரோட்டில் ஹோண்டா
டூவீலரில் சென்றார். அப்போது வாஞ்சியூர் என்ற இடத்தில் திருவாரூரில்
இருந்து மன்னார்குடி நோக்கிச் சென்ற மினிடோர் வேன் மோதியதில் இறந்தார்.