sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவாரூர்

/

காஸ் சிலிண்டர் டோக்கன் மறுப்பு திருவாரூரில் திடீர் சாலைமறியல்

/

காஸ் சிலிண்டர் டோக்கன் மறுப்பு திருவாரூரில் திடீர் சாலைமறியல்

காஸ் சிலிண்டர் டோக்கன் மறுப்பு திருவாரூரில் திடீர் சாலைமறியல்

காஸ் சிலிண்டர் டோக்கன் மறுப்பு திருவாரூரில் திடீர் சாலைமறியல்

1


ADDED : செப் 27, 2011 11:58 PM

Google News

ADDED : செப் 27, 2011 11:58 PM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாரூர்: திருவாரூரில் காஸ் சிலிண்டர் சப்ளைக்கான டோக்கன் சரிவர வழங்காத ஏஜன்ஸியை கண்டித்து, பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். திருவாரூர் வடக்குவீதியில், 'இன்டேன்' காஸ் நிறுவனத்தின் ஏஜன்ஸியாக, பிரியா காஸ் ஏஜன்ஸி செயல்பட்டு வருகிறது. திருவாரூர் நகரில் உள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இங்கு, 24 சிலிண்டர்களை பெற ஒரு டோக்கன் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டோக்கன் பெறாத வாடிக்கையாளருக்கு சிலிண்டர் சப்ளை செய்யப்படுவது இல்லை.

தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் டோக்கன் வரும்போது, தினமும் ஐம்பது பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படுகிறது. மீதமுள்ளவர்கள் திரும்பி அனுப்பப்படுகின்றனர். நேற்று வழக்கம்போல டோக்கன் வாங்க வந்தவர்களின் பெரும்பானோர் திரும்ப அனுப்பப்பட்டனர். ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள், வடக்குவீதியில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த, திருவாரூர் மாவட்ட டி.ஆர்.ஓ., லெட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் துரைப்பாண்டியன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். சாலைமறியலில் ஈடுபட்ட வாடிக்கையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை கலைந்து போகச் செய்தனர். 'ஏஜன்ஸியில் உள்ள வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, அவர்களின் வரிசை எண்படி, எந்தெந்த நாட்களில் டோக்கன் வழங்கப்படும் என்பதையும், விடுபட்டவர்களுக்கு எந்த நாட்களில் வழங்கப்படும் என்பதையும் முன்கூட்டியே தெரிவித்து, முறையான அனுமதி பெற்ற பின்னரே டோக்கன் வழங்க வேண்டும். அதுவரை சிலிண்டர் சப்ளை நிறுத்தக்கூடாது' என்று டி.ஆர்.ஓ., லெட்சுமி ஏஜன்ஸிக்கு உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us