sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவாரூர்

/

குடிபோதையில் தகராறு: கொத்தனார் கொலை 

/

குடிபோதையில் தகராறு: கொத்தனார் கொலை 

குடிபோதையில் தகராறு: கொத்தனார் கொலை 

குடிபோதையில் தகராறு: கொத்தனார் கொலை 


ADDED : ஏப் 03, 2025 03:07 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 03:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாரூர்:நன்னிலம் அருகே, குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கொத்தனார் குத்தி கொலை செய்யப்பட்டார்.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே, பெரும்புகளூர் கிராமத்தை சேர்ந்தவர், பாலமுருகன், 45, கொத்தனார்.

இவர் எதிர் வீட்டில் வசிப்பவர் மாதவன், 35, நாகப்பட்டினத்தில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிகிறார். கடந்த, 2016ல் நடந்த கோவில் திருவிழாவில் இருபிரிவினரிடையே தகராறு ஏற்பட்டது.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

நேற்று, இரு தரப்பினரும் நீதிமன்றத்திற்கு வழக்கு தொடர்பாக சென்று வந்தனர்.

நேற்று மாலை, 6:00 மணிக்கு, பாலமுருகன், மாதவன் ஒன்றாக அமர்ந்து மது குடித்தனர். அப்போது, இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த மாதவன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பாலமுருகனை குத்தினார். அதே இடத்தில் அவர் இறந்தார்.

தகவல் அறிந்த நன்னிலம் போலீசார், பாலமுருகன் உடலை கைப்பற்றி, நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். நன்னிலம் போலீசார் மாதவனை கைது செய்து விசாரிக்கின்னறர்.






      Dinamalar
      Follow us