/
உள்ளூர் செய்திகள்
/
திருவாரூர்
/
ஐம்பொன் சிலைகள் கடத்தியவர்கள் கைது
/
ஐம்பொன் சிலைகள் கடத்தியவர்கள் கைது
ADDED : பிப் 08, 2026 07:57 AM

திருவாரூர்: சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட இரு ஐம்பொன் சிலைகளை, சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவா ரூர் வழியாக, சுவாமி சிலைகள் கடத்தி வரப்படுவதாக, கும்பகோணம் சிலை கடத்தல் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
நேற்று முன்தினம், திருவாரூர் மாவட்டம், தி ருத்து றைப்பூண்டி அருகே, ஆலிவலத்தில், அவ்வழியாக வரும் கார்களை போலீசார் சோதனை நடத்தி, சொகுசு கார் ஒன்றை மடக்கினர்.
காரில் இ ருந்த பழமையான, இரு ஐம்பொன் சிலைகளை கடத்தி வந்த, தம்பிக்கோட்டை மணிகண்டன், திருவாரூரைச் சேர்ந்த ராமச்சந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பாக, மேலும் இருவரை, சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார், நேற்று கைது செய்துள்ளனர்.

