sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவாரூர்

/

சிறுவனுக்கு பாலியல் தொல்லை பெண்ணிற்கு 54 ஆண்டு சிறை

/

சிறுவனுக்கு பாலியல் தொல்லை பெண்ணிற்கு 54 ஆண்டு சிறை

சிறுவனுக்கு பாலியல் தொல்லை பெண்ணிற்கு 54 ஆண்டு சிறை

சிறுவனுக்கு பாலியல் தொல்லை பெண்ணிற்கு 54 ஆண்டு சிறை


ADDED : நவ 07, 2025 02:19 AM

Google News

ADDED : நவ 07, 2025 02:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாரூர்: நன்னிலம் அருகே, 10ம் வகுப்பு படித்த சிறுவனுக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்த பால்வாடி சமையல் பெண் ஊழியருக்கு, 54 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, திருவாரூர் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே, எரவாஞ்சேரி அடுத்த, தேதியூரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்.

இவரது மனைவி, லலிதா, 38. இவர், வடுகர்பாளையம் பால்வாடி மையத்தில் சமையலராக பணிபுரிந்தார்.

இவர், தேதியூர் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்த சிறுவனை, 2021, அக்., 26ல், 'டான்ஸ்' கற்று தருவதாக கூறி, பல ஊர்களுக்கு, அழைத்து சென்றார்.

இவர் அழைத்து சென்றது தெரியாமல், எரவாஞ்சேரி போலீசில், சிறுவனின் பெற்றோர் புகார் அளித்தனர். சிறுவனை, போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், சிறுவனை பல ஊர்களுக்கு லலிதா அழைத்துச் சென்று, பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்த நிலையில், லலிதாவை, போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர் மகிளா நீதிமன்ற நீதிபதி சரத்ராஜ் விசாரித்து, லலிதாவிற்கு, 54 ஆண்டு கள் சிறை தண்டனை, 18,000 ரூபாய் அபராதம் விதித்து, உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us