sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

தனியாக இருந்த தாய்,- மகள் கொலை

/

தனியாக இருந்த தாய்,- மகள் கொலை

தனியாக இருந்த தாய்,- மகள் கொலை

தனியாக இருந்த தாய்,- மகள் கொலை


ADDED : மார் 04, 2025 03:46 AM

Google News

ADDED : மார் 04, 2025 03:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி : துாத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் அருகே மேலநம்பிபுரம் கிராமம், கீழத்தெருவைச் சேர்ந்த பூவண் மனைவி சீதாலட்சுமி, 75. பூவண் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களது மகள் ராமஜெயந்தி, 47, கணவரை பிரிந்து தாயுடன் வசித்தார்.

நேற்று மாலை வரை தாயும், மகளும் வீட்டில் இருந்து வெளியே வராததால், அக்கம்பக்கத்தினர் எட்டையபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் அங்கு சென்றபோது, சீதாலட்சுமியும், ராமஜெயந்தியும் சடலமாக கிடந்தனர். துாத்துக்குடி எஸ்.பி., ஆல்பர்ட் ஜான், விளாத்திகுளம் டி.எஸ்.பி., அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.

இருவரும் தலையணையால் அமுக்கி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. அவர்கள் அணிந்திருந்த, 10 சவரன் நகைகள் கொள்ளை போயுள்ளது.

தாய், மகள் இருவரும் வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட நபர்கள், நள்ளிரவில் வீடு புகுந்து கொலை செய்திருக்கலாம் என, கூறப்படுகிறது.

மோப்பநாய், தடயவியல் நிபுணர்கள் உதவியோடு விசாரணை நடந்து வருகிறது. குடும்ப தகராறில் கொலை நடந்ததா, நகைக்காக நடந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us