sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

அரசு பஸ் - - பைக் மோதல் குலசை பக்தர்கள் 2 பேர் பலி

/

அரசு பஸ் - - பைக் மோதல் குலசை பக்தர்கள் 2 பேர் பலி

அரசு பஸ் - - பைக் மோதல் குலசை பக்தர்கள் 2 பேர் பலி

அரசு பஸ் - - பைக் மோதல் குலசை பக்தர்கள் 2 பேர் பலி


ADDED : அக் 04, 2025 02:43 AM

Google News

ADDED : அக் 04, 2025 02:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி:அரசு பஸ் மீது பைக் மோதியதில் குலசை பக்தர்கள் இருவர் உயிரிழந்தனர்.

துாத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த சூரசம்ஹாரத்தில், பல லட்சம் பக்தர்கள் பங்கேற்றனர். திருநெல்வேலி மாவட்டம், விஜயாபதி அருகே ஆவுடையாள்புரத்தை சேர்ந்த குருமூர்த்தி, 21, ரஞ்சித், 18, பாரத், 18, ஆகியோர் மாலை அணிந்து கோவிலுக்கு வந்தனர்.

திருவிழா முடிந்து ஒரே பைக்கில் நேற்று அதிகாலை அவர்கள் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். குருமூர்த்தி பைக்கை ஓட்டியுள்ளார். மணப்பாடு செல்லும் சாலை வளைவில் திரும்பியபோது, எதிரே, நாகர்கோவிலில் இருந்து வந்த அரசு பஸ் மீது பைக் மோதியது.

மூவரும் துாக்கி வீசப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே குருமூர்த்தி, ரஞ்சித் உயிரிழந்தனர். படுகாயமடைந்த பாரத், திருச்செந்துார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். குலசேகரன்பட்டினம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us