sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

மாணவர்களுக்குள் மோதல் 3 பேர் காயம்; இருவர் கைது

/

மாணவர்களுக்குள் மோதல் 3 பேர் காயம்; இருவர் கைது

மாணவர்களுக்குள் மோதல் 3 பேர் காயம்; இருவர் கைது

மாணவர்களுக்குள் மோதல் 3 பேர் காயம்; இருவர் கைது


ADDED : செப் 13, 2025 01:48 AM

Google News

ADDED : செப் 13, 2025 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி:கல்லுாரி மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் 3 பேர் காயமடைந்தனர்.

துாத்துக்குடி, லெவிஞ்சிபுரத்தை சேர்ந்த செண்பகராஜ், 19, பலவேசம், 19, ஆகியோர் திருச்செந்துார் செல்லும் சாலையில் அமைந்துள்ள காமராஜ் கல்லுாரியில் இளங்கலை வரலாறு இரண்டாமாண்டு படித்து வருகின்றனர். அதே கல்லுாரியில் தாளமுத்துநகரை சேர்ந்த ஆதித்யா, 19, அசோக், 19, ஆகியோரும் படித்து வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன், கல்லுாரியில் வைத்து பலவேசத்திற்கும், அசோக்கிற்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அசோக்கை பலவேசம் தாக்கியுள்ளார். ஆத்திரமடைந்த அசோக் தன் நண்பர்களான ஆதித்யா, சிவசந்திரன், 27, ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு கல்லுாரி முன் வந்துள்ளார்.

அங்குள்ள மாரியம்மன்கோவில் முன் நின்று கொண்டிருந்த பலவேசம், செண்பகராஜ், அவர்களது நண்பரான சக்தி, 21, ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். ஒரு தரப்பினர் கல்லால் தாக்கியதில், காயமடைந்த செண்பகராஜ், பலவேசம், சக்தி ஆகியோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

துாத்துக்குடி தென்பாகம் போலீசார், மாணவர்கள் ஆதித்யா, சிவசந்திரன் ஆகியோரை நேற்று கைது செய்தனர். அசோக்கை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us