/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
கொலை வழக்கில் விவசாயிக்கு ஆயுள்
/
கொலை வழக்கில் விவசாயிக்கு ஆயுள்
ADDED : அக் 31, 2025 03:03 AM

துாத்துக்குடி:  முதியவரை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில், விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
துாத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே அகரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ், 71. இவரது தோட்டத்தில் அதே பகுதியை சேர்ந்த காசி என்பவர் வேலை பார்த்து வந்தார். காசிக்கும், அவரது சகோதரர் கணேசன், 61, என்பவருக்கும் குடும்பத் தகராறு இருந்து வந்தது.
காசிக்கு ஆதரவாக ஜெயராஜ் செயல்பட்டுள்ளார்.
ஆத்திரமடைந்த கணேசன், கடந்த 2019 ஏப்ரல் 8 ல் அங்குள்ள சர்ச் முன் நின்று கொண்டிருந்த ஜெயராஜை கத்தியால் குத்தி கொலை செய்தார்.
ஏரல் போலீசார் வழக்கு பதிவு செய்து கணேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு துாத்துக்குடி மாவட்ட இரண்டாவது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி பிரீத்தா குற்றம்சாட்டப்பட்ட கணேசனுக்கு ஆயுள் தண்டனையும், 5000 ரூபாய் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

