sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

‛கையெழுத்து போட்டே ஆகணும் ': பிஎம்ஸ்ரீ கல்வித்திட்டம் குறித்து ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் கடிதம்

/

‛கையெழுத்து போட்டே ஆகணும் ': பிஎம்ஸ்ரீ கல்வித்திட்டம் குறித்து ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் கடிதம்

‛கையெழுத்து போட்டே ஆகணும் ': பிஎம்ஸ்ரீ கல்வித்திட்டம் குறித்து ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் கடிதம்

‛கையெழுத்து போட்டே ஆகணும் ': பிஎம்ஸ்ரீ கல்வித்திட்டம் குறித்து ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் கடிதம்

19


ADDED : ஆக 30, 2024 06:13 PM

Google News

ADDED : ஆக 30, 2024 06:13 PM

19


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ‛‛தமிழக அரசு உறுதி அளித்தபடி பிஎம்ஸ்ரீதிட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்'', என முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது: சமக்ர சிக்சா திட்டத்தின் மூலம் தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர். இத்திட்டத்தை தமிழகம் செயல்படுத்தி வருவதால் கல்வி தரத்தை மேலும் உயர்த்த பிஎம்ஸ்ரீ திட்டத்தை ஏற்பது அவசியம்.

குழந்தைகளின் கல்வி, எதிர்காலத்திற்கு அரசியல் கொள்கைகள் குறுக்கீடுகள் தடையாக இருக்கக்கூடாது. புதிய கல்விக் கொள்கையின் பலன்கள் நாடு முழுவதும் உள்ள மாணவர்களை சென்றடைய வேண்டும். தமிழக அரசு உறுதி அளித்தபடி பிஎம்ஸ்ரீதிட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.

தமிழ் மொழியுடன் பன்மொழிகளை மாணவர்கள் கற்பதை ஊக்குவிக்க மத்திய அரசு ஒருங்கிணைந்த முயற்சி எடுத்து வருகிறது. தமிழ் மொழியை மாணவர்கள் கற்க ஏதுவாக கடந்த ஜூலையில் தமிழ் சேனல் ஒன்று துவங்கப்பட்டது. இவ்வாறு அந்த கடிதத்தில் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us