sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

மிளகாய் பழங்களை காப்பாற்ற முயன்ற பிளஸ் 2 மாணவி பலி

/

மிளகாய் பழங்களை காப்பாற்ற முயன்ற பிளஸ் 2 மாணவி பலி

மிளகாய் பழங்களை காப்பாற்ற முயன்ற பிளஸ் 2 மாணவி பலி

மிளகாய் பழங்களை காப்பாற்ற முயன்ற பிளஸ் 2 மாணவி பலி


ADDED : ஏப் 22, 2025 07:18 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 07:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி: பிளஸ் 2 தேர்வு எழுதி, முடிவுக்காக காத்திருந்த மாணவி, மின்னல் தாக்கி பலியானார்.

துாத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் அருகே குரளையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி மகள் முத்து கவுசல்யா, 17. தனியார் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த இவர், அரசு பொதுத்தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருந்தார்.

விளாத்திக்குளம் பகுதியில், நேற்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. வீட்டின் அருகே காய வைக்கப்பட்டிருந்த மிளகாய் பழங்கள் மழையில் நனையாமல் இருக்க, தார்ப்பாயால் மூடுவதற்காக அந்த சிறுமி சென்றார்.

அப்போது, திடீரென மின்னல் தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார். அவரின் உடலைப் பார்த்து, தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். விளாத்திக்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us