sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

ரூ.3.75 கோடி மதிப்புள்ள கடத்தல் சிகரெட் பறிமுதல்

/

ரூ.3.75 கோடி மதிப்புள்ள கடத்தல் சிகரெட் பறிமுதல்

ரூ.3.75 கோடி மதிப்புள்ள கடத்தல் சிகரெட் பறிமுதல்

ரூ.3.75 கோடி மதிப்புள்ள கடத்தல் சிகரெட் பறிமுதல்


ADDED : அக் 19, 2025 03:25 AM

Google News

ADDED : அக் 19, 2025 03:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி: ஐக்கிய அரபு எமிரேட்சின், துபாய் ஜெபல் அலி துறைமுகத்தில் இருந்து துாத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்திற்கு சில நாட்களுக்கு முன் வந்த சரக்கு கப்பலில், ஒரு கன்டெய்னரில், பெங்களூரு நிறுவனத்திற்கு 'வெட் டேட்ஸ்' எனப்படும் ஈரப்பதமான பேரீச்சம்பழங்கள் இறக்குமதி செய்யப்படுவதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்நிறுவனம் போலி என தெரியவந்ததால், மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கன்டெய்னரை சோதனை செய்தனர். அதில், பாதி அளவுக்கு பேரீச்சம்பழம் பாக்கெட் பண்டல்களும், மறுபுறத்தில் சிகரெட் பெட்டிகளும் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

மொத்தம், 1,300 பெட்டிகளில் இருந்த 20 லட்சம் சிகரெட்டுகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு, 3.75 கோடி ரூபாய்.பிரபல நிறுவனங்கள் பெயரில் போலி சிகரெட் தயாரிக்கப்பட்டு, கடத்தி வரப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. அதிகாரிகள் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us