/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
அரசு பள்ளி முன் பெட்ரோல் குண்டு வீசிய மாணவர்கள்
/
அரசு பள்ளி முன் பெட்ரோல் குண்டு வீசிய மாணவர்கள்
ADDED : நவ 01, 2025 02:14 AM
துாத்துக்குடி: மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில், அரசு பள்ளி முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அரசுப்பள்ளி மாணவ - மாணவியருக்கான விவசாயம் சார்ந்த கருத்தரங்கம் சமீபத்தில் தனியார் கல்லுாரியில் நடந்தது. துாத்துக்குடி --- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த அந்த கல்லுாரியில், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளியில் இருந்தும் மாணவர்கள் பங்கேற்றனர்.
மதிய உணவு இடைவேளையின் போது, வல்லநாடு மாணவர்கள், சவலாப்பேரி மாணவர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இருதரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். ஆசிரியர்கள் அவர்களை தடுத்து அனுப்பினர்.
அப்போது, ஒரு தரப்பு மாணவர்களை, மற்றொரு தரப்பு மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வைத்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, நேற்று முன்தினம் நடந்த கருத்தரங்கில் சவலாப்பேரி பள்ளி மாணவர்கள் பங்கேற்கவில்லை. வல்லநாடு பள்ளி உட்பட மற்ற பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை சவலாப்பேரி அரசு பள்ளியில் இருந்து 50 மீ தொலைவில் இரண்டு பெட்ரோல் குண்டுகளை சிலர் வீசினர். புளியம்பட்டி போலீசார் விசாரணையில், மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் குண்டு வீசப்பட்டது தெரியவந்துள்ளது.
ஒரு பைக்கில் வந்த மூன்று மாணவர்கள் பெட்ரோல் குண்டுகளை பள்ளி முன் வீசி சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

