sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

ஆட்சி மாறியும் காட்சிகள் மாறவில்லை விளாத்திகுளம் பகுதியில் ரோடுகள் படுமோசம்

/

ஆட்சி மாறியும் காட்சிகள் மாறவில்லை விளாத்திகுளம் பகுதியில் ரோடுகள் படுமோசம்

ஆட்சி மாறியும் காட்சிகள் மாறவில்லை விளாத்திகுளம் பகுதியில் ரோடுகள் படுமோசம்

ஆட்சி மாறியும் காட்சிகள் மாறவில்லை விளாத்திகுளம் பகுதியில் ரோடுகள் படுமோசம்


ADDED : செப் 17, 2011 02:14 AM

Google News

ADDED : செப் 17, 2011 02:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விளாத்திகுளம் : விளாத்திகுளம் பகுதியில் விளாத்திகுளம் டூ குளத்தூர், சூரங்குடி டூ எட்டையபுரம் முக்கிய ரோடுகள் உட்பட பெரும்பாலான ரோடுகள் போக்குவரத்துக்கே லாயகற்ற நிலையில் உள்ளது.

ஆட்சி மாறினாலும் இந்த ரோடுகளுக்கு இதுவரை விமோஜனம் பிறக்கவில்லையே என பொதுமக்கள் புலம்புகின்றனர். விளாத்திகுளம் பகுதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அதிகளவில் போக்குவரத்து நிறைந்த விளாத்திகுளம் டூ குளத்தூர் மற்றும் சூரங்குடி டூ எட்டையபுரம் ரோடுகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த ரோடுகளில் அதிகளவில் மணல் லாரிகள் செல்வதாலும், ரோடுகள் தரமில்லாமல் போடப்பட்டிருந்ததாலும் கடந்த ஆண்டு பெய்த மழையினாலும், போக்குவரத்துக்கே லாயக்கற்ற நிலையில் உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாகவே இந்த ரோடுகளின் நிலை கவலைக்கிடமாகவே உள்ளது. கடந்த ஆண்டே இந்த ரோடுகள் சீரமைக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆட்சி மாற்றத்திற்கு பின் இந்த ரோடுகள் சீரமைக்கப்பட்டு விடும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு இதுவரை ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ஆட்சி மாறியும் காட்சிகள் மாறவில்லையே என புலம்புகின்றனர். இந்த முக்கிய ரோடுகள் மட்டுமல்லாமல் விளாத்திகுளம் பகுதியில் பெரும்பாலான ரோடுகள் நிலைமையும் மிகவும் மோசமாகவே உள்ளது. மழை காலம் நெருங்கிவரும் வேளையில் ரோடுகள் மேலும் மோசமாகிவிடும் என்பதால் பயணிகள் மிகவும் வேதனையுடன் உள்ளனர்.








      Dinamalar
      Follow us