sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

ஸ்டாலின் கூறியது பலித்து விட்டது!

/

ஸ்டாலின் கூறியது பலித்து விட்டது!

ஸ்டாலின் கூறியது பலித்து விட்டது!

ஸ்டாலின் கூறியது பலித்து விட்டது!


ADDED : செப் 27, 2024 02:25 PM

Google News

ADDED : செப் 27, 2024 02:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொழிற்பேட்டை மற்றும் சிவந்திபட்டியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் கட்டப்பட்ட புதிய பயணிகள் நிழற்குடைகளை திறந்து வைத்த பின்னர் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தால் தி.மு.க., ஊழலுக்கு எதிரான கட்சி என்ற மாயை அகற்றப்பட்டுள்ளது தி.மு.க., ஆட்சிக் காலத்தில் தான் செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டது. அதே ஆட்சியில் தான் அமைச்சராக இருந்து செந்தில் பாலாஜி சிறைக்கு சென்றுள்ளார்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருந்த நாட்களை சாதனையாக கூறுகின்றனர். செந்தில் பாலாஜியை முதல்வராக கூட ஆக்கலாம், அதற்கு விதி இருக்கிறது. ஆனால் மரபை பார்க்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின் விதியை மதிக்கின்றாரா அல்லது மரபை கடைபிடிக்கின்றாரா என்பது அமைச்சரவை மாற்றத்தின் மூலம் தெரியவரும்

செந்தில் பாலாஜி சிறை செல்வார் என்ற ஸ்டாலின் வாய் முகூர்த்தம் பலித்து விட்டது. எதிர்பக்கம் இருந்தால் கோட்சே; தன் பக்கம் வந்து விட்டால் காந்தி என்று சொல்வதைப்போல செந்தில் பாலாஜி விவகாரத்தை தி.மு.க., கையாளுகிறது என்று மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

இவ்வாறு ராஜூ தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us