/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
சபலிஸ்டை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய 3 பேர் கைது
/
சபலிஸ்டை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய 3 பேர் கைது
சபலிஸ்டை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய 3 பேர் கைது
சபலிஸ்டை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய 3 பேர் கைது
ADDED : மார் 04, 2025 02:19 AM
திருப்பத்துார்: மத்திய அரசு ஆண் ஊழியரை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டி, 2.30 லட்சம் ரூபாய் பறித்த பெண்கள் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டைச் சேர்ந்தவர் சூசையம்மாள், 35; வீட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பி வைக்கும், 'சன் லைட் ஹோம் கேர்' நிறுவனம் நடத்தி வருகிறார். இதில், கிருஷ்ணகிரி மாவட்டம், மூகண்டஹள்ளியைச் சேர்ந்த நளினி, 32, பணிக்கு சேர்ந்தார்.
திருப்பத்துார் மாவட்டம் புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் மாதேஸ்வரன், 50; திருப்பத்துார் தலைமை அஞ்சல் அலுவலக கண்காணிப்பாளர்.
இவரது தாய்க்கு உடல்நலக் குறைவால், சூசையம்மாளிடம் வீட்டு வேலைக்கு ஆள் கேட்டார். அவரும் நளினியை சில நாட்களுக்கு முன் அனுப்பி வைத்தார்.
அப்போது, நளினி, மாதேஸ்வரன் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது.
இதைப் பயன்படுத்தி மாதேஸ்வரன் நிர்வாணமாக இருக்கும்போது, நளினி மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார். வீடியோவை காட்டி மிரட்டி, 5 லட்சம் ரூபாய் கேட்டு இருவரும் மிரட்டியுள்ளனர்.
மாதேஸ்வரனும், 2.30 லட்சம் ரூபாய் வரை கொடுத்துள்ளார். மீதி பணம் கேட்டு தொந்தரவு செய்யவே, மொபைல்போனை 'சுவிட்ச் ஆப்' செய்துள்ளார்.
இதனால் ஆம்பூரைச் சேர்ந்த விமல்ராஜ், 40, என்பவரை மாதேஸ்வரன் வீட்டுக்கு அனுப்பி, பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
திருப்பத்துார் டவுன் போலீசில் மாதேஸ்வரன் புகாரளித்தார். விசாரித்த போலீசார், செல்வி, நளினி, விமல்ராஜை கைது செய்தனர்.