/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
கணவர் இறப்பால் விரக்தி மனைவி, மகள் தற்கொலை
/
கணவர் இறப்பால் விரக்தி மனைவி, மகள் தற்கொலை
ADDED : ஆக 07, 2024 10:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜோலார்பேட்டை:திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த சந்தை கோடியூரில் வசிப்பவர் கற்பகம், 42, பியூட்டி பார்லர் நடத்தி வந்தார். இவரது மகள் சுபிக்ஷா, 16, பிளஸ் 2, படித்து விட்டு வீட்டிலிருந்து வந்தார். கற்பகத்தின் கணவர் குகநாதன், இரு மாதங்களுக்கு முன் ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷனில் ரயிலில் அடிபட்டு பலியானார். அவர் இறந்த துக்கத்தில் இருந்து வந்த கற்பகத்திற்கு, கடன் தொல்லையும் இருந்தது.
நேற்று முன்தினம் இரவில் இருவரும், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். கணவர் இறந்த விரக்தியில் மனைவியுடன் மகளும் தற்கொலை செய்திருக்கலாம் என ஜோலார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.