/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
புல்லுார் தடுப்பணையில் அம்மன் சிலை கண்டெடுப்பு
/
புல்லுார் தடுப்பணையில் அம்மன் சிலை கண்டெடுப்பு
ADDED : மே 09, 2024 11:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பத்துார் : திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தமிழக - ஆந்திர எல்லையான புல்லுார் தடுப்பணையில் இரு ஆண்டுகளாக நீர் நிரம்பியிருந்த நிலையில், தற்போது கோடை வெயிலின் தாக்கத்தால், அணையில் நீர் வற்றி, சிறிய குட்டைபோல் காட்சி அளிக்கிறது.
இந்த அணையில் நேற்று, அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் குதித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, 3 அடி உயர அம்மன் கற்சிலை ஒன்று இருப்பதை கண்டு, அதை மீட்டனர்.
ஆந்திர மாநில குப்பம்போலீசார் சிலையை மீட்டு, பழங்கால சிலையா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.