sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பத்தூர்

/

காதலன், கர்ப்பிணி காதலி ரயில் முன் பாய்ந்து தற்கொலை

/

காதலன், கர்ப்பிணி காதலி ரயில் முன் பாய்ந்து தற்கொலை

காதலன், கர்ப்பிணி காதலி ரயில் முன் பாய்ந்து தற்கொலை

காதலன், கர்ப்பிணி காதலி ரயில் முன் பாய்ந்து தற்கொலை


ADDED : ஜூன் 01, 2025 02:52 AM

Google News

ADDED : ஜூன் 01, 2025 02:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பத்துார்: திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பத்தை சேர்ந்தவர் நித்தின் ராகுல், 21. ஜோலார்பேட்டை அடுத்த காவேரிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தரணி, 21. இருவரும் பெங்களூரிலுள்ள வியாசா நர்சிங் கல்லுாரியில், இரண்டாம் ஆண்டு படித்தபோது காதல் ஏற்பட்டு, தரணி 9 மாத கர்ப்பமானார். இதனால் நித்தின் ராகுலிடம், தன்னை திருமணம் செய்துகொள்ள வலியுறுத்தினார்.

திருமணத்திற்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால், மனமுடைந்த நித்தின் ராகுல், நேற்று முன்தினம் நள்ளிரவு, பெரியாங்குப்பம் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த தரணி, நேற்று காலை, வாணியம்பாடி ரயில்வே ஸ்டேஷன் அருகே சென்னையிலிருந்து பெங்களூரு நோக்கி சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதில், தரணி வயிற்றிலிருந்த சிசுவும் இறந்தது.

ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us