sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பத்தூர்

/

லாரி மீது கார் மோதி விபத்து; மகன் பலி; பெற்றோர் காயம்

/

லாரி மீது கார் மோதி விபத்து; மகன் பலி; பெற்றோர் காயம்

லாரி மீது கார் மோதி விபத்து; மகன் பலி; பெற்றோர் காயம்

லாரி மீது கார் மோதி விபத்து; மகன் பலி; பெற்றோர் காயம்


ADDED : செப் 30, 2025 08:08 AM

Google News

ADDED : செப் 30, 2025 08:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாட்றம்பள்ளி,; லாரி மீது கார் மோதிய விபத்தில், மகன் பலியான நிலையில், பெற்றோர் படுகாயமடைந்தனர்.

ஆந்திர மாநிலம், குப்பம் அடுத்த சாந்தி நகரை சேர்ந்தவர் ரவீந்திரன், 54; தனியார் வங்கி மேலாளர். இவரது மனைவி பிரசன்னா, 45, மகள் காவியா, 23, மகன் அன்னம் ஸ்ரீகிருஷ்ணா சாத்விக், 17. இவர், அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்தார். ரவீந்திரன், தன் குடும்பத்துடன் காரில், சென்னைக்கு சென்று விட்டு, மீண்டும் குப்பம் நோக்கி நேற்று முன்தினம் இரவு, 7:00 மணியளவில் திரும்பினார்.

திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியது. இதில், ரவீந்திரன், பிரசன்னா, அன்னம் ஸ்ரீகிருஷ்ணா சாத்விக் ஆகியோர் படுகாயமடைந்தனர். காவியாவிற்கு லேசான காயம் ஏற்பட்டது.

நாட்றம்பள்ளி போலீசார் அவர்களை மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், அன்னம் ஸ்ரீகிருஷ்ணா சாத்விக் உயிரிழந்தார். ரவீந்திரன், பிரசன்னா சிகிச்சையில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us