ADDED : செப் 20, 2024 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பத்துார்,:திருப்பத்துார் அடுத்த பொம்மிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் உதயகுமார், 38, கூலித்தொழிலாளி. இவரது மகன் கவியரசு, 9, 5ம் வகுப்பு மாணவர். கடந்த, 17ம் தேதி அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்படவே, திருப்பத்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பரிசோதனையில், கவியரசுக்கு டெங்கு உறுதியானது. மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று இறந்தார்.