sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பத்தூர்

/

அங்கன்வாடிக்கு பூட்டு தி.மு.க. பிரமுகர் அடாவடி

/

அங்கன்வாடிக்கு பூட்டு தி.மு.க. பிரமுகர் அடாவடி

அங்கன்வாடிக்கு பூட்டு தி.மு.க. பிரமுகர் அடாவடி

அங்கன்வாடிக்கு பூட்டு தி.மு.க. பிரமுகர் அடாவடி


ADDED : ஜன 25, 2024 01:26 AM

Google News

ADDED : ஜன 25, 2024 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆம்பூர்:திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த நாச்சார்குப்பம் பஞ்., கம்மியம்பட்டு புதுாரிலுள்ள, அங்கன்வாடி மையம், கடந்த, 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இங்கு, 22 குழந்தைகள் படிக்கின்றனர். அப்பகுதியை சேர்ந்த, தி.மு.க., கிளை செயலர் பூபதி, 47, என்பவர், இந்த இடம், எங்களது உறவினருக்கு சொந்தமான இடம் எனக்கூறி நேற்று, அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளை வெளியேற்றிவிட்டு, பூட்டு போட்டார். இதனால், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெளியே வெயிலில் குழந்தைகள் நின்றிருந்தனர்.

ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தியதில், 1980ம் ஆண்டு, அந்த இடம் அரசுக்கு எழுதி கொடுக்கப்பட்டு விட்டது என்பது தெரிந்தது. இதையடுத்து, அங்கன்வாடி மையத்தை திறந்து, குழந்தைகளை உள்ளே அமர வைத்தனர். தி.மு.க., பிரமுகரின் அடாவடி செயல், கிராம மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us