sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பத்தூர்

/

டாக்டர் கூட்டு பலாத்காரம் சிறுவனுக்கும் '20 ஆண்டு'

/

டாக்டர் கூட்டு பலாத்காரம் சிறுவனுக்கும் '20 ஆண்டு'

டாக்டர் கூட்டு பலாத்காரம் சிறுவனுக்கும் '20 ஆண்டு'

டாக்டர் கூட்டு பலாத்காரம் சிறுவனுக்கும் '20 ஆண்டு'


ADDED : பிப் 19, 2025 01:15 AM

Google News

ADDED : பிப் 19, 2025 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை:பெண் டாக்டர் கூட்டு பலாத்கார வழக்கில், சிறுவனுக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

வேலுார் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்த பீஹாரை சேர்ந்த பெண் டாக்டர், நண்பரான நாக்பூரை சேர்ந்த ஆண் டாக்டருடன், 2022 மார்ச், 16 இரவில், வேலுாரிலிருந்து காட்பாடிக்கு சென்றார்.

அப்போது ஐந்து பேர் கொண்ட கும்பல் ஆட்டோவில் கடத்தி, பெண் டாக்டரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, 40,000 ரூபாய், 2 சவரன் நகை, மொபைல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பியது.

இதில், 17 வயது சிறுவன் உட்பட, ஐந்து பேரை வேலுார் வடக்கு போலீசார் கைது செய்தனர். இதில், நான்கு பேருக்கு ஜன., 30ல், வேலுார் மகளிர் நீதிமன்றத்தில், 20 ஆண்டு சிறை தண்டனை, தலா, 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. சிறுவன் குறித்த வழக்கு, போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

விசாரித்த நீதிபதி சிவக்குமார், நேற்று, சிறுவனுக்கு, 20 ஆண்டு சிறை, 23,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us