/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
கொலை வழக்கில் 9 பேரை விடுவிக்க கோரி கலெக்டர் ஆபீஸில் நரிக்குறவர்கள் முற்றுகை முயற்சி
/
கொலை வழக்கில் 9 பேரை விடுவிக்க கோரி கலெக்டர் ஆபீஸில் நரிக்குறவர்கள் முற்றுகை முயற்சி
கொலை வழக்கில் 9 பேரை விடுவிக்க கோரி கலெக்டர் ஆபீஸில் நரிக்குறவர்கள் முற்றுகை முயற்சி
கொலை வழக்கில் 9 பேரை விடுவிக்க கோரி கலெக்டர் ஆபீஸில் நரிக்குறவர்கள் முற்றுகை முயற்சி
ADDED : அக் 09, 2025 01:35 AM
ஈரோடு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று சென்னிமலை மற்றும் ஈரோடு பகுதியை சேர்ந்த நரிக்குறவர்கள், 20க்கும் மேற்பட்டோர் முற்றுகையிடும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சூரம்பட்டி போலீசார் அவர்களை தடுத்து, விபரம் கேட்டறிந்தனர். அதற்குள், ஏ.டி.எஸ்.பி., விவேகானந்தன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, முற்றுகையிட முயன்றவர்களை தடுத்து பேசினர்.
ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே ஒட்டன்குட்டை, கரியங்காட்டுதோட்டத்தில் கடந்த, 2023 செப்., 9ல் விவசாயி முத்துசாமி, 85, அவரது மனைவி சாமியாத்தாள், 80, ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். அவர்களது வீட்டில் இருந்து, 15 பவுன் நகை, 60,000 ரூபாய் ரொக்கப்பணம் கொள்ளை போனது. இவ்வழக்கில் சென்னிமலை மற்றும் சுற்று பகுதியில் வசித்த நரிக்குறவர்கள், 9 பேர் உட்பட, 11 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த, இரண்டு ஆண்டுகளாக இவர்களுக்கு ஜாமின் வழங்காமலும், வழக்கை நடத்தி முடிக்காமலும் இழுத்தடிப்பதாக நரிக்குறவர்கள் கூறினர். தங்களது கணவர், மகன்களுக்கு ஜாமின் வழங்கி விடுவிக்க வேண்டும் என கோரினர். விரைவாக நடவடிக்கை எடுப்பதாக, ஏ.டி.எஸ்.பி., கூறியதை ஏற்று அவர்கள் கலைந்து சென்றனர்.
தொடர்ந்து முற்றுகையிட வந்தவர்கள் கூறியதாவது:
ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே மேகரையான் தோட்டம் பகுதியில் ராமசாமி, 75, அவரது மனைவி பாக்கியம்மாள், 65, ஆகியோர் கடந்த மே மாதம் கொலை செய்யப்பட்டனர். அக்கொலையில் கைதான அரச்சலுார் ஆச்சியப்பன், மாதேஸ்வரன், ரமேஷ் ஆகியோர், சிவகிரி, சென்னிமலை போன்ற இடங்களில் நடந்த கொலையை தாங்களே செய்ததாக ஒப்பு கொண்டதாக தகவல் வெளியானது. ஆனால், போலீசார் அதை விட்டுவிட்டு, சென்னிமலை கொலை வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட எங்களது கணவர், மகன் போன்றோரையே குற்றவாளிகள் என கொண்டு வருகின்றனர். போலீசார் தப்பித்து கொள்வதற்காக இவ்வாறு செய்கின்றனர். இவ்வழக்கை முழுமையாக விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.