sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பத்தூர்

/

மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை;பேரன், மருமகள் கைது

/

மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை;பேரன், மருமகள் கைது

மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை;பேரன், மருமகள் கைது

மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை;பேரன், மருமகள் கைது


ADDED : ஜூலை 06, 2024 05:24 PM

Google News

ADDED : ஜூலை 06, 2024 05:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பத்துார் : திருப்பத்துார் அருகே, மூதாட்டியை கொலை செய்து நகையை கொள்ளையடித்து சென்ற பேரன், உடந்தையாக இருந்த மருமகளை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்துார் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த பூங்குளம் பலப்பல் நத்தம் ஏரி வட்டத்தை சேர்ந்தவர் அனுமக்காள், 82; கணவனை இழந்து தனியாக வசித்து வந்தார். இவர்களது மகன் சிவராஜ், மகள் சம்பூர்ணம். இருவரும் திருமணமாகி, அதே ஊரில் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த, 27ம் தேதி காலை வீட்டில் காது, மூக்கு அறுக்கப்பட்டு நகைகள் எடுத்து சென்ற நிலையில், அனுமக்காள் கொலை செய்யப்பட்டு கிடந்தார். ஆலங்காயம் போலீசார் விசாரணை நடத்தியதில், மூதாட்டியின் மகன் வழி பேரன் சிவக்குமார், 32, அனுமக்காளிடம் மது குடிக்க பணம் கேட்டதால் அவர் தர மறுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்து, மூதாட்டியின் கழுத்தை நெரித்து கீழே தள்ளி, அவர் மீது ஏறி அமர்ந்து தலையணையால் முகத்தை அமுக்கி கொலை செய்தது தெரியவந்தது.

பின்னர் நகைகளை கழட்ட முடியாததால், காது, மூக்கை அறுத்து, ஒன்றரை பவுன் நகையை எடுத்து கொண்டு மூதாட்டி சுருக்கு பையில் வைத்திருந்த, 350 ரூபாயையும் எடுத்து சென்று, நகையை, தாய் மலரிடம் கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பேரன் சிவக்குமார், நகையை மறைத்து வைத்திருந்த மருமகள் மலர் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us