ADDED : டிச 03, 2024 05:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நேற்று முன்தினம் இரவு, திருப்பத்துார் மாவட்டம் ஜவ்வாதுமலை பகுதியில் புதுார் நாடு, நெல்லிவாசல், மற்றும் அதை சுற்றியுள்ள மலை கிராமங்களில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
இதில், ஆங்காங்கே நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலையில், 20க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு மரங்கள் மற்றும் பாறைகள் உருண்டோடி சாலையில் விழுந்துள்ளன.
இதை, திருப்பத்துார் மாவட்ட நெடுஞ்சாலைத்துறையினர், அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.