/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
மாணவர்களை தாக்கிய மதரசா ஆசிரியர் நீக்கம்
/
மாணவர்களை தாக்கிய மதரசா ஆசிரியர் நீக்கம்
ADDED : நவ 18, 2025 07:18 AM
திருப்பத்துார்: மதரசா பள்ளியில் மாணவ - மாணவியரை தாக்கிய ஆசிரியரை நீக்க பெற்றோர் வலியுறுத்தியதால், மசூதி நிர்வாகிகள் அவரை பணி நீக்கம் செய்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி பஷிராபாத் மசூதி வளாக கட்டடத்தின் முதல் தளத்திலுள்ள மதரசா பள்ளியில், 60, மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இங்கு நான்கு ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
இதில், வாணியம்பாடி ஷாகிராபாத் பகுதியை சேர்ந்த சுஹேப் என்ற ஆசிரியர், மாணவ - மாணவியரை கடுமையாக தாக்கும் வீடியோ பரவியது.
அதிர்ச்சியடைந்த பெற்றோர், பஷிராபாத் மசூதி நிர்வாகிகளிடம் வாக்குவாதம் செய்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இதையடுத்து, அவரை பணியிலிருந்து நீக்கியதாக, மசூதி நிர்வாகிகள் கூறியதையடுத்து, பெற்றோர் சமாதானமடைந்தனர்.

