sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பத்தூர்

/

ரூ.2,000 கடனை திருப்பி கேட்ட வாலிபர் கத்தியால் குத்தி கொலை

/

ரூ.2,000 கடனை திருப்பி கேட்ட வாலிபர் கத்தியால் குத்தி கொலை

ரூ.2,000 கடனை திருப்பி கேட்ட வாலிபர் கத்தியால் குத்தி கொலை

ரூ.2,000 கடனை திருப்பி கேட்ட வாலிபர் கத்தியால் குத்தி கொலை


ADDED : நவ 03, 2024 02:55 AM

Google News

ADDED : நவ 03, 2024 02:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பத்துார்:திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பெரியமூக்கனுாரைச் சேர்ந்தவர் கோட்டீஸ்வரன், 27. இவர், சிங்கப்பூரில் பணியாற்றி வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், 30, என்பவருக்கு சில ஆண்டுகளுக்கு முன், 2,000 ரூபாய் கடன் கொடுத்தார். கடந்த வாரம் விடுமுறையில் ஊருக்கு வந்த கோட்டீஸ்வரன், பணத்தை திருப்பி தரும்படி கேட்டபோது மணிகண்டன் மறுத்தார்.

கோட்டீஸ்வரன், தன் உறவினர் கிருபாகரனிடம் கூறினார். நேற்று முன்தினம் இரவு, 10:00 மணியளவில் மூக்கனுாரில் கிருபாகரன், மணிகண்டன் இருவரும், ஒன்றாக அமர்ந்து மது அருந்தியபோது, கோட்டீஸ்வனுக்கு தர வேண்டிய, 2,000 ரூபாயை தரும் படி மணிகண்டனிடம், கிருபாகரன் கேட்டார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

தகவலறிந்து அங்கு வந்த கோட்டீஸ்வரனும், மணிகண்டனிடம் தகராறு செய்து பணம் கேட்டார். அப்போது, ஆத்திரமடைந்த கோட்டீஸ்வரன், மணிகண்டனை கத்தியால் குத்த முயன்றார். சுதாரித்த மணிகண்டன், கத்தியை பிடுங்கி, கோட்டீஸ்வரனின் வயிற்றில் சரமாரியாக குத்திக் கொன்று விட்டு தப்பினார். ஜோலார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us