sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தள்ளிப்போகும் பதவி உயர்வு புலம்பித்தள்ளும் ஊழியர்கள்

/

தள்ளிப்போகும் பதவி உயர்வு புலம்பித்தள்ளும் ஊழியர்கள்

தள்ளிப்போகும் பதவி உயர்வு புலம்பித்தள்ளும் ஊழியர்கள்

தள்ளிப்போகும் பதவி உயர்வு புலம்பித்தள்ளும் ஊழியர்கள்


ADDED : ஜூலை 25, 2011 09:15 PM

Google News

ADDED : ஜூலை 25, 2011 09:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : 'அரசு அலுவலகங்களில் நிலவும் ஊழியர் பற்றாக்குறையால், பதவி உயர்வு உள்ளிட்ட பயன்கள் கிடைப்பது தள்ளிப்போகிறது,' என, அரசு ஊழியர்கள் புலம்புகின்றனர்.

கடந்த முறை அ.தி.மு.க., ஆட்சியில் இருந்தபோது, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, மாநிலம் முழுவதும் 4,000 பேர் அரசு பணிக்கு தேர்வு செய்து, தற்காலிக ஊழியராக நியமிக்கப்பட்டனர். அரசு பணியாளர்களுக்கு பொதுவாக இரண்டாண்டு கள் தகுதி காண் பருவமாக பணிப்பதிவேட்டில் பதிவு செய்யப்படும். அதன் பின், குறிப்பிட்ட கால இடைவெளியில் அவர்களுக்கு உரிய ஊதிய உயர்வு, தகுதி உயர்வு, பணி உயர்வு வழங்கப்படும். திருப்பூர் மாவட்டத்தில் தற்காலிக ஊழியர்களாக 250 பேர் பணியாற்றி வருகின்றனர். வருவாய்த்துறை, நில அளவைத்துறை, குடிமைப்பொருள் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலகங்களில் பணியாற்றுகின்றனர். இவர்களோடு பணியில் சேர்ந்த, பிற மாவட்டங்களில் பணியாற்றும் ஊழியர்கள், தகுதி அடிப்படையில் இளநிலை உதவியாளராக உள்ளனர். ஆனால், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:அரசு அலுவலகங்களில் உதவியாளராக பணியாற்றுவோர், குறிப்பிட்ட காலத்துக்கு பின், பவானி சாகரில் உள்ள அரசுத்துறை ஊழியர் பயிற்சி மையத்தில் இரண்டு மாத பயிற்சிக்கு அனுப்பப்படுவர். இப்பயிற்சி முடிந்ததும், இளநிலை உதவியாளர் மற்றும் மூப்பு அடிப்படையில் தலைமை உதவியாளர் என பதவி உயர்வு வழங்கப்படும். எங்களுடன் பணியில் சேர்ந்த பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள், இப்பயிற்சியை முடித்து விட்டு பதவி உயர்வு பெற்றுள்ளனர். திருப்பூர் மாவட்டம் துவங்கப்பட்டு மூன்றாண்டுகளாகிறது. ஆனால், எந்த அரசு அலுவலகத்திலும் தேவையான அளவு ஊழியர்கள் இல்லை. எங்களை போன்ற ஊழியர்கள் இரண்டு மாத பயிற்சிக்கு அனுப்பப்பட்டால், அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே, அப்பயிற்சிக்கு அனுப்புவதில் உயரதிகாரிகள் அக்கறை காட்டாமல் உள்ளனர். இதனால், எங்களின் பதவி உயர்வு மற்றும் பலன்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அலுவலகம் வாரியாக தலா இரண்டு பேர் வீதம் அப்பயிற்சிக்கு அனுப்ப வேண்டும், என்றனர்.








      Dinamalar
      Follow us