sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது

/

தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது

தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது

தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது


ADDED : செப் 10, 2011 02:05 AM

Google News

ADDED : செப் 10, 2011 02:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : உடுமலை எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் நல்லாசிரியர் விருது பெற்றார்.

உடுமலை கன்னிகா பரமேஸ்வரி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக பணியாற்றி வருபவர் ரவீந்திரன். இவர் 13 ஆண்டுகள் ஈரோடு அருள்நெறி திருப்பணி மன்றம் மேல்நிலைப் பள்ளியிலும், 6 ஆண்டுகள் ஈரோடு நசியனூர் பாரதி கல்வி நிலையம் மேல்நிலைப்பள்ளியிலும் உயிரியல் பாட முதுகலை பட்டதாரி ஆசிரியராக பணியாற்றினார். 2005ம் ஆண்டிலிருந்து உடுமலை எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2010-11ம் கல்வியாண்டிற்கான தமிழக அரசின் நல்லாசிரியர் விருதினை தமிழக அரசு வழங்கியது. சென்னை சேத்துப்பட்டு எம்.சி.சி., மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த ஆசிரியர் தின விழாவில், பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் சண்முகம் நல்லாசிரியர் விருதினை வழங்கினார். விருது பெற்ற தலைமையாசிரியர் ரவீந்திரனை பள்ளி கழக தலைவர் டாக்டர் மோகன்பிரசாத், நிர்வாகிகள், ஆசிரியர்கள் உட்பட பலர் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us