sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

துவக்கப் பள்ளியில் சேர 12 ஆயிரம் பேர் பதிவு

/

துவக்கப் பள்ளியில் சேர 12 ஆயிரம் பேர் பதிவு

துவக்கப் பள்ளியில் சேர 12 ஆயிரம் பேர் பதிவு

துவக்கப் பள்ளியில் சேர 12 ஆயிரம் பேர் பதிவு


ADDED : மே 28, 2024 12:41 AM

Google News

ADDED : மே 28, 2024 12:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;அரசு பள்ளிகளில் அட்மிஷன் ஏப்ரல் இறுதியில் துவங்கியது. பள்ளிகள் கோடை விடுமுறை விடும் முன்பே மாணவர் சேர்க்கை துவங்கினாலும் பெற்றோர் அவ்வளவு 'வேகமாக' அக்கறை காட்டவில்லை.

ஐந்து முடித்து, ஆறாம் வகுப்பு, 8ம் வகுப்பில் இருந்து 9ம் வகுப்பு, 10ம் வகுப்பு முடித்து பிளஸ் 1 வேறு பள்ளியில் இணைய பெற்றோர், மாணவர் ஆர்வம் காட்டினர். இந்நிலையில், மே, 15க்கு பின் பள்ளிகளில் அட்மிஷன் சுறுசுறுப்பாகி உள்ளது. துவக்க, நடுநிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர், நான்கு ஆசிரியர்கள் தினசரி அட்மிஷன் பணிகளை கவனிப்பதால், பெற்றோர், மாணவ, மாணவியர் வந்து விபரங்களை கேட்டுச் செல்கின்றனர்.

மாநகராட்சி பகுதியில் செயல்படும் அரசு பள்ளி களில் உள்ள மாணவர் சேர்க்கை ஆர்வம், புற நகர் மற்றும் கிராமங்களில் குறைந்தளவே உள்ளதாக, கல்வித்துறையினர் தெரிவிக்கின்றனர்.

'கடந்த, 23ம் தேதி வரை மாவட்டத்தில் உள்ள துவக்க பள்ளியில் சேர, 12 ஆயிரத்து, 686 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். பிற பகுதிகளை விட, திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் உள்ள அரசு, மாநகராட்சி பள்ளிகளில் இணைய அதிகளவில் பதிவு நடைபெற்றுள்ளது,' என, சி.இ.ஓ., கீதா தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us