ADDED : செப் 09, 2024 01:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முயற்சி மக்கள் அமைப்பு, சென்ட்ரல் லயன்ஸ் சங்க அறக்கட்டளை இணைந்து நடத்திய அரசு மருத்துவமனைக்கான ரத்ததான முகாம் திருப்பூர் காந்தி நகர் லயன்ஸ் கிளப் வளாகத்தில் நடந்தது.முயற்சி மக்கள் அமைப்பு தலைவர் சிதம்பரம் தலைமை வகித்தார். செயலாளர் விஜயராஜ் முன்னிலை வகித்தார். துணை தலைவர் சுப்பிரமணியம் வரவேற்றார். லயன்ஸ் கிளப் முன்னாள் தலைவர் அனந்த நாராயணன் தொடங்கி வைத்தார்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனை மருத்துவர் சரண்யா தலைமையில் மருத்துவ குழுவினர் 14 யூனிட் ரத்தம் சேகரித்தனர்.