sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

200 போதை மாத்திரை; ஆறு வாலிபர்கள் கைது

/

200 போதை மாத்திரை; ஆறு வாலிபர்கள் கைது

200 போதை மாத்திரை; ஆறு வாலிபர்கள் கைது

200 போதை மாத்திரை; ஆறு வாலிபர்கள் கைது


ADDED : செப் 05, 2024 12:45 AM

Google News

ADDED : செப் 05, 2024 12:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா, குட்கா, போதை மாத்திரை புழக்கம் தொடர்பாக போலீசார் கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசாரின் கண்காணிப்பையும் மீறி, வெளி மாநிலங்களில் இருந்து ரயில், பஸ், கூரியர் மூலமாக கடத்தி வருகின்றனர். சமீப காலமாக, வலி நிவாரண மாத்திரைகளை போதைக்கு பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. முறைகேடாக வழங்கும் மெடிக்கல் கடை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இச்சூழலில், கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து கூரியர் மூலம் திருப்பூருக்கு வரக்கூடிய பார்சல்களில் போதை மாத்திரை கடத்தல் குறித்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். நேற்று முன்தினம் கூரியர் மூலம் போதை மாத்திரை பார்சலை போலீசார் கைப்பற்றினர். அதிலிருந்த, 200 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக, திருப்பூரை சேர்ந்த சந்தோஷ், 22, அசோக், 20, அலெக்ஸ், 20, அபுதாகீர், 24, பாஸ்கர், 21 மற்றும் கலைவாணன், 24 ஆகியோரை கைது செய்தனர். பார்சலில் வரும் மாத்திரைகளை பெற்று போதைக்கு பயன்படுத்தி வந்ததும், மற்றவர்களுக்கு சப்ளை செய்ததும் தெரிந்தது.






      Dinamalar
      Follow us