/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரூ.240 கோடிக்கு வர்த்தக விசாரணை
/
ரூ.240 கோடிக்கு வர்த்தக விசாரணை
ADDED : செப் 07, 2024 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்தியா நிட்பேர் வளாகத்தில் கடந்த, 4ம் தேதி துவங்கி நடைபெற்றுவந்த ஐ.கே.எப்., சர்வதேச பின்னலாடை கண்காட்சி நேற்று நிறைவடைந்தது. இதனை, உலகளாவிய நாடுகளைச் சேர்ந்த 180 வர்த்தகர்களும், 240 வர்த்தக முகமையினரும் பார்வையிட்டுள்ளனர்.
கண்காட்சியில் உடனடியாக, 240 கோடி ரூபாய்க்கு வர்த்தக விசாரணை நடைபெற்றுள்ளது. வரும் நாட்களில், 800 கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் நடைபெறும் என, ஐ.கே.எப்., சேர்மன் சக்திவேல் தெரிவித்தார்.