sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

காங்கேயத்தில் போலீசாரை தாக்கிய இலங்கை தமிழர்கள் 4பேர் கைது

/

காங்கேயத்தில் போலீசாரை தாக்கிய இலங்கை தமிழர்கள் 4பேர் கைது

காங்கேயத்தில் போலீசாரை தாக்கிய இலங்கை தமிழர்கள் 4பேர் கைது

காங்கேயத்தில் போலீசாரை தாக்கிய இலங்கை தமிழர்கள் 4பேர் கைது


ADDED : ஜூலை 21, 2024 11:09 AM

Google News

ADDED : ஜூலை 21, 2024 11:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: காங்கேயத்தில் போலீஸ் ஸ்டேஷனில் புகுந்து, போலீசாரை தாக்கிய, இலங்கை தமிழர்கள் நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில், பள்ளி மாணவிகளிடம் குறும்பு செய்த, இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தை சேர்ந்த வாலிபர் விஸ்வா என்பவரை, போலீஸ்காரர் மணிகண்டன் விசாரணைக்காக, காங்கேயம் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று மாலை அழைத்து சென்றார். அப்போது ஸ்டேசனில் இரு போலீசார் மட்டுமே இருந்தனர். இதையறிந்த இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த சிலர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தனர்.

போலீசாரை திடீரென தாக்கியுள்ளனர். இதில் இரண்டு போலீசார், ஒரு பெண் எஸ்.ஐ., காயமடைந்ததாக தெரிகிறது. இதை தொடர்ந்து காங்கேயம் டி.எஸ்.பி., பார்த்தீபன், இலங்கை தமிழர்களான விஸ்வா, கோபிநாத், விவேக், விஜய் என நான்கு பேரை கைது செய்தார். உடுமலை கோர்ட்டில் நான்கு பேரையும் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைக்க கொண்டு சென்றனர்.






      Dinamalar
      Follow us