sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சூறவாளி காற்றுக்கு 4 ஆயிரம் வாழை சேதம்

/

சூறவாளி காற்றுக்கு 4 ஆயிரம் வாழை சேதம்

சூறவாளி காற்றுக்கு 4 ஆயிரம் வாழை சேதம்

சூறவாளி காற்றுக்கு 4 ஆயிரம் வாழை சேதம்


ADDED : மே 06, 2024 11:25 PM

Google News

ADDED : மே 06, 2024 11:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி:அவிநாசி அடுத்த சேவூர் பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை சாரல் மழை பெய்தது. பின், சூறாவளிக்காற்று வீசியது.

இதில் தண்டுக்காரன்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பயிரிட்டு இருந்த வாழை மரங்கள் சாய்ந்தன. நேற்று வருவாய்த் துறையினர் சேதமான வாழை மரங்களை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அதில் பொன்னுச்சாமி, ராமமூர்த்தி மற்றும் கல்யாணி ஆகியோர் தோட்டத்தில் தலா ஆயிரம் வாழை மரங்களும் செல்வமணி, வெள்ளியங்கிரி, பழனிச்சாமி, ருக்மணி உள்ளிட்டோர் தோட்டங்களில் 300 முதல் 400 வாழை மரங்களும் சேதமாகியுள்ளன என தெரிவித்தனர்.

சுமார் 4 ஆயிரம் வாழை மரங்கள் பலத்த சூறாவளி காற்றுக்கு முறிந்து சேதமடைந்துள்ளது.

விவசாயிகள் கூறுகையில், 'இன்னும் இரண்டொரு வாரங்களில் அறுவடை செய்யும் நிலையில் இருந்த வாழை மரங்கள் சூறாவளிகாற்றின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் முறிந்துள்ளது.

இதனால் பல லட்சம் ரூபாய் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. உரிய இழப்பீடு வழங்க வேண்டும்'' என கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us