/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கல்லுாரி மாணவியிடம் கூட்டு பாலியல் அத்துமீறல் 8 பேர் 'குண்டாசில்' கைது
/
கல்லுாரி மாணவியிடம் கூட்டு பாலியல் அத்துமீறல் 8 பேர் 'குண்டாசில்' கைது
கல்லுாரி மாணவியிடம் கூட்டு பாலியல் அத்துமீறல் 8 பேர் 'குண்டாசில்' கைது
கல்லுாரி மாணவியிடம் கூட்டு பாலியல் அத்துமீறல் 8 பேர் 'குண்டாசில்' கைது
ADDED : மே 05, 2024 12:26 AM

திருப்பூர்;வெள்ளகோவிலில், கல்லுாரி மாணவியிடம் கூட்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தொடர்பாக, எட்டு பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் வீரக்குமாரசுவாமி கோவிலில் மகா சிவாரத்திரியை முன்னிட்டு தேர்த்திருவிழா நடந்தது. அப்போது, கோவில் இசைகச்சேரியை பார்ப்பதற்காக, 17 வயது கல்லுாரி மாணவி தனது தாயாருடன் சென்றார்.
கூட்டத்தில், மாணவி திடீரென மாயமானார். இதுதொடர்பாக புகாரின் பேரில், வெள்ளகோவில் போலீசார் தேடினர். மறுநாள் காலையில் மாணவி வீட்டுக்கு வந்தார். அங்கு வந்த சிலர், தன்னை காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று கூட்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிவித்தார். மாணவியின் புகாரின் பேரில், காங்கயம் அனைத்து மகளிர் போலீசார், எட்டு பேரை கைது செய்தனர்.
குண்டாசில் கைது
இச்சூழலில், கூட்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மணிகண்டன், 29, பிரபாகர், 32, தினேஷ், 27, பாலசுப்ரமணி, 30, நவீன்குமார், 26, மோகன்குமார், 28, நந்தகுமார், 30 மற்றும் தமிழ்செல்வன், 28 எட்டு பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய திருப்பூர் எஸ்.பி., அபிஷேக் குப்தா, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவின் பேரில், எட்டு பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.