sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

புதிய பஸ் ஸ்டாண்டில் நடைமேம்பாலம் அமைகிறது! அவசியமற்றது என்கின்றனர் பொதுமக்கள்

/

புதிய பஸ் ஸ்டாண்டில் நடைமேம்பாலம் அமைகிறது! அவசியமற்றது என்கின்றனர் பொதுமக்கள்

புதிய பஸ் ஸ்டாண்டில் நடைமேம்பாலம் அமைகிறது! அவசியமற்றது என்கின்றனர் பொதுமக்கள்

புதிய பஸ் ஸ்டாண்டில் நடைமேம்பாலம் அமைகிறது! அவசியமற்றது என்கின்றனர் பொதுமக்கள்


ADDED : மே 18, 2024 11:56 PM

Google News

ADDED : மே 18, 2024 11:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி;'அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நடை மேம்பாலம் அமைக்கும் திட்டத்தால் பலன் இருக்காது' என்ற ஆட்சேபனை எழுந்துள்ளது.

'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தின் கீழ், அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நடை மேம்பாலம் அமைக்க, 2.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அதற்கான மாதிரி அளவீடு பணியில், நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேம்பாலம் அமையவுள்ள இடத்தில் உள்ள கடைக்காரர்களை காலி செய்யுமாறு, கூறி வருகின்றனர். 'இங்கு நடை மேம்பாலம் அமைக்கப்படுவதால், மக்களுக்கு பெரியளவில் பலன் இல்லை' என, கருத்தும் எழுந்துள்ளது.

பணிகள் ஜரூர்

இருப்பினும், நடைமேம்பாலம் அமைப்பதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் கோபாலகிருஷ்ணன், நெடுஞ்சாலை துறை அதிகாரிக்கு அனுப்பிய மனுவில் ''புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நடை மேம்பாலம் அமைக்கப்பட்டால், முகப்பில் உள்ள கடைக்காரர்கள் பாதிக்கப்படுவர்; கோவை மார்க்கமாக செல்லும் பஸ்களுக்காக பயணிகள் நிற்கும் இடமும், மிகக்குறுகியதாக மாறிவிடும்.

இதனால், 'பீக் ஹவர்ஸ்' எனப்படும் காலை, மாலை நேரங்களில், பயணிகள் கூட்டம் அலைமோதும்; நெரிசல், விபத்து நேரிடும் வாய்ப்பும் உள்ளது. இங்கு நடை மேம்பாலம் அமைப்பதற்கு பதிலாக பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் அமைத்தால், அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும், நுாற்றுக்கணக்கான மாணவிகள் பாதுகாப்பாக சாலையை கடப்பதற்கு உதவியாக இருக்கும்'' என கூறியிருந்தார்.

நெடுஞ்சாலைத்துறையினர் அளித்துள்ள விளக்கத்தில், ''நடை மேம்பாலம் அமைப்பது தொடர்பாக ஏற்கனவே அரசுக்கு கருத்துரு அனுப்பி, அனுமதி பெற்றுவிட்ட நிலையில் நடை மேம்பாலம் அமைக்கும் பணிக்கு டெண்டர் விடப்பட்டு விட்டது'' என, கூறியுள்ளனர்.

கருத்து கேட்க வேண்டமா?

திருப்பூர் கலெக்டராக வினீத் இருந்த போது, அவிநாசியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், 'அவரிடம் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நடைமேம்பாலம் அமைக்க வேண்டும்' என்ற கோரிக்கையை பேரூராட்சி தலைவர் தனலட்சுமி முன் வைக்க, ''நெரிசல் நிறைந்த திருப்பூர் நகரின் பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நடைமேம்பாலங்கள் பயனின்றி கிடக்கின்றன; மக்கள் யாரும் மேம்பாலம் மீது ஏறி செல்ல விரும்புவதில்லை. எனவே, நடை மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்குவது வீண்; அந்த நிதியை வேறு திட்டத்துக்கு பயன்படுத்தலாம்'' எனக் கூறியிருந்தார்.நடைமேம்பாலம் அமைக்கும் விவகாரம் தொடர்பாக, நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தினர் குழு அமைத்து, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் கருத்துக் கேட்டு, அதன்படி பணியை துவக்கியிருக்க வேண்டும் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.








      Dinamalar
      Follow us