/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சைக்கிளால் மாறிய பயணம்: 'றெக்கை' கட்டி பறக்கலாம்
/
சைக்கிளால் மாறிய பயணம்: 'றெக்கை' கட்டி பறக்கலாம்
ADDED : செப் 01, 2024 11:21 PM

தங்கராஜ், சைக்கிள் ஷோரூம் உரிமையாளர்:
சோளிபாளையம் சொந்த ஊர். விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை. பனியன் நிறுவனத்தில் டெய்லராக சேர்ந்து, சூப்பர்வைசர் என அடுத்தடுத்த நிலையை அடைந்தேன்.
தொழில் அனுபவங்களைக்கொண்டு, கடந்த 2005ல், உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனத்தை துவக்கினேன். படிப்படியாக, 2008ல், ஆடை ஏற்றுமதி நிறுவனத்தை துவக்கினேன். போலந்து நாட்டுக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்தேன்.
சிறுவயது முதலே, சைக்கிகள் ரெய்டில் மிகுந்த ஆர்வம். ரைடர்ஸ் கிளப் என்ற பெயரில், நண்பர்கள் இணைந்து இன்றுவரை தினமும் இரண்டு மணி நேரம் சைக்கிளில் ரெய்டு சென்றுகொண்டிருக்கிறோம்.
திருப்பூரில் பெரிய அளவிலான சைக்கிள் ஷோரூம்கள் இல்லை. கடந்த 2010 ல், திருப்பூர் - அவிநாசி ரோட்டில் பெயரில், சைக்கிள் விற்பனை ஷோரூம் துவக்கினேன்.
ஆடை ஏற்றுமதியை விடவும், சைக்கிள் வர்த்தகம் எனக்கு கைகொடுத்தது. அதனால், 2018ல் ஆடை ஏற்றுமதியை விட்டுவிட்டு, முழுமையாக சைக்கிள் வர்த்தகத்தில் கவனம் செலுத்தினேன்.
கடந்த 2022 ல், காங்கயம் ரோட்டில் மற்றொரு ஷோரூமை உருவாக்கி செயல்படுத்திவருகிறேன். உள்நாட்டு, வெளிநாட்டு தயாரிப்பிலான அனைத்து சைக்கிகள்களையும் விற்பனை மற்றும் சர்வீஸ் செய்கிறோம். தற்போது, மாதம் 90 சைக்கிள்கள் விற்பனையாகின்றன.
இன்றைய அவசர காலத்தில், பைக், கார்கள் பயன்பாடு அதிகரித்துவிட்டது. ஆடை ஏற்றுமதியைவிட, சைக்கிள் வர்த்தகத்தில் சவால்கள் அதிகம் உள்ளன. ஆனாலும், மனதுக்கு பிடித்ததை செய்வதால், சோதனைகள் பெரிதாக தெரிவதில்லை.