/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரேஷன் கடையில் கண்காணிப்பு குழு அமைக்கணும்!
/
ரேஷன் கடையில் கண்காணிப்பு குழு அமைக்கணும்!
ADDED : மே 22, 2024 12:51 AM
திருப்பூர்;திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து ரேஷன்கடைகளிலும், கண்காணிப்புக்குழு உருவாக்கவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து, சமூக ஆர்வலர் சரவணன், கலெக்டர் கிறிஸ்துராஜிடம் அளித்த மனு:
திருப்பூர் மாவட்டத்திலுள்ள பெரும்பாலான ரேஷன்கடைகளில் கண்காணிப்புக்குழுக்கள் உருவாக்கப்படவில்லை. இப்படி ஒரு குழு இருப்பதே, பெரும்பாலான கார்டுதாரர்களுக்கு தெரியவில்லை.
ரேஷன் பணியாளர்கள், தங்களுக்கு சாதகமான நபர்களையே கண்காணிப்புக்குழு உறுப்பினராக நியமித்துள்ளனர். சில ரேஷன்கடைகளில், பதவிக்காலம் முடிவடைந்து, 7 ஆண்டுகளாகியும், புதிய குழு அமைக்கப்படவில்லை. அனைத்து ரேஷன்கடைகளிலும், சிறந்த நபர்களை தேர்வு செய்து, கண்காணிப்புக்குழு உறுப்பினராக நியமிக்கவேண்டும். இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை, புதிய குழு உருவாக்கவேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

