sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குளமாக மாறும் தேசிய நெடுஞ்சாலை

/

குளமாக மாறும் தேசிய நெடுஞ்சாலை

குளமாக மாறும் தேசிய நெடுஞ்சாலை

குளமாக மாறும் தேசிய நெடுஞ்சாலை


ADDED : ஆக 07, 2024 11:02 PM

Google News

ADDED : ஆக 07, 2024 11:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : மடத்துக்குளத்தில், கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் அடிக்கடி உடைந்து, தேசிய நெடுஞ்சாலை தடுப்பணையாக மாறும் பிரச்னை நீண்ட காலமாக நீடித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.

கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், மடத்துக்குளம் அமைந்துள்ளது. நெடுஞ்சாலையை ஒட்டி, தாலுகா அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், அரசு மருத்துவமனை, பஸ் ஸ்டாண்ட் ஆகியவை வரிசையாக அமைந்துள்ளன.

மேலும், தற்காலிக ஆக்கிரமிப்புகளால், அமராவதி ஆற்றுப்பாலம் வரை, நெடுஞ்சாலை குறுகலாகவே உள்ளது. இந்நிலையில், மடத்துக்குளம் நால்ரோடு அருகே, கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் அடிக்கடி உடைகிறது.

திருமூர்த்திமலை மற்றும் ஊரக குடியிருப்புகளுக்கு குடிநீர் செல்லும் பிரதான குழாய், தேசிய நெடுஞ்சாலை ஒட்டி அமைந்துள்ளது. அடிக்கடி குழாய் உடைவதால், பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகிறது. மேலும், வெளியேறும் குடிநீர், தேசிய நெடுஞ்சாலையில், தேங்கி, அப்பகுதி குளம் போல் மாறி விடுகிறது.

நீண்ட காலமாக நீடிக்கும் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக, குடிநீர் வடிகால் வாரியத்தினர், பிரதான குழாயை மாற்றியமைக்க வேண்டும். அடிக்கடி உடைப்பு ஏற்படுவதற்கான காரணத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மடத்துக்குளம் பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us