sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கால்களை பதம் பார்க்கும் கம்பி; பள்ளி முன் காத்திருக்கும் ஆபத்து

/

கால்களை பதம் பார்க்கும் கம்பி; பள்ளி முன் காத்திருக்கும் ஆபத்து

கால்களை பதம் பார்க்கும் கம்பி; பள்ளி முன் காத்திருக்கும் ஆபத்து

கால்களை பதம் பார்க்கும் கம்பி; பள்ளி முன் காத்திருக்கும் ஆபத்து


ADDED : மார் 12, 2025 12:38 AM

Google News

ADDED : மார் 12, 2025 12:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; சின்னசாமியம்மாள் பள்ளி முன்புறம் நடைபாதையில் நீட்டிக் கொண்டிருக்கும் இரும்பு கம்பிகள் நடந்து செல்வோருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளன.

திருப்பூர் மாநகராட்சி சார்பில், கொங்கு மெயின் ரோடு ஸ்மார்ட் சிட்டி ரோடாக அமைக்கப்பட்டுள்ளது. ரோட்டின் இரு புறங்களில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ரோட்டில் குறுக்கு ரோடுகள் சந்திக்கும் இடங்கள், பிரதான கட்டடங்கள் அமைந்துள்ள இடங்களில் நடைபாதையில் இடைவெளி விடப்பட்டுள்ளது.

நடைபாதை மீது வாகனங்கள் சென்று வருவதை தடுக்கும் வகையில், சிறிய வடிவிலான சிமென்ட் துாண்கள் இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன. அதில் சில இடங்களில் சேதமடைந்துள்ளன. சின்னசாமியம்மாள் பள்ளி வாசல் முன் உள்ள நடைபாதையில் உள்ள இந்த தடுப்பு துாண்கள் சேதமடைந்து பெயர்ந்து தனியாக காட்சியளிக்கிறது.

முற்றிலும் பெயர்ந்து போன துாணின் மீதமுள்ள இரும்பு கம்பிகள் தரையில் வெளியே நீட்டிக் கொண்டு ஆபத்தான முறையில் காணப்படுகிறது.

நடைபாதையில் நடந்து செல்லும் மாணவர்கள் பொதுமக்கள், இதனால் பாதிக்கப்படுகின்றனர். சேதமடைந்த சிமென்ட் தடுப்புகளை உடனே சீரமைக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us