/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பஞ்சலிங்கம் அருவிக்கு செல்ல மூன்றாவது நாளாக தடை
/
பஞ்சலிங்கம் அருவிக்கு செல்ல மூன்றாவது நாளாக தடை
ADDED : ஜூலை 17, 2024 08:45 PM
உடுமலை: திருமூர்த்திமலை பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மூன்றாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலைப்பகுதிகளில், கடந்த மூன்று நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால், மலைமேலுள்ள பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், மூன்றாவது நாளாக, நேற்றும், பாதுகாப்பு கருதி, சுற்றுலா பயணியர், பஞ்சலிங்கம் அருவிக்கும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவில் ஊழியர்கள் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மலையடிவாரத்திலுள்ள, அமணலிங்கேஸ்வரர் கோவிலில் வழக்கமான பூஜைகள் நடந்து வருவதோடு, பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.