sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

உபகரணம் இன்றி விபத்து; தொழிற்சங்கம் குற்றச்சாட்டு

/

உபகரணம் இன்றி விபத்து; தொழிற்சங்கம் குற்றச்சாட்டு

உபகரணம் இன்றி விபத்து; தொழிற்சங்கம் குற்றச்சாட்டு

உபகரணம் இன்றி விபத்து; தொழிற்சங்கம் குற்றச்சாட்டு


ADDED : மே 06, 2024 11:36 PM

Google News

ADDED : மே 06, 2024 11:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:பாதுகாப்பு உபகரணம் வழங்காமல், ஒப்பந்த தொழிலாளர்களை மின்சார பணிகளில் ஈடுபடுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.

சேலம் மேச்சேரியை சேர்ந்தவர் சரவணன்; திருப்பூரில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த, 3ம் தேதி முதலிபாளையம் துணை மின் நிலையம் சென்று, மின் கம்பத்தில் ஏறி பணியாற்றி கொண்ருந்த போது, மின்சாரம் தாக்கியது.

திருமணமான சில மாதங்களில் இவ்வாறு விபத்து ஏற்பட்டுள்ளது, ஊழியர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அலுவலர்கள் கவனக்குறைவு காரணமாக, அப்பாவி ஒப்பந்த தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த, நான்கு ஆண்டு களில், 40 ஒப்பந்த தொழிலாளர் மின்விபத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 10 பேர் உயிரிழந்துள்ளனர். பாதுகாப்பு உபகரணம் வழங்காமல், ஒப்பந்த தொழிலாளர்களை மின்சார பணிகளில் ஈடுபடுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மின்வாரிய பொது ஒப்பந்த தொழிலாளர் முன்னேற்ற கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us