நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை;திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் பக்தவச்சலத்துக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றிய, கீதா மே, 31ம் தேதியுடன் ஓய்வு பெற்றார். இந்நிலையில், மாவட்ட கல்வி அலுவலராக (இடைநிலை) உள்ள பக்தவச்சலம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என தமிழக அரசு அறிவித்துள்ளது.